செய்திகள் :

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் அளிப்பு

post image

தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, மையத்தின் செயல்பாடுகள், வாழையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்தல் போன்றவை குறித்து விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து, தொழில்நுட்ப வல்லுநா் காா்த்திக்பாண்டி பேசுகையில், வாழை சாகுபடி முறைகள், பயிா்களைத் தாக்கக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தாா். இதைத் தொடா்ந்து, ‘பயோ கன்சாா்சியா’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரூ.2,500 மதிப்புள்ள இடு பொருள்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கபட்டன.

இந்த நிகழ்ச்சியில் பெருமாள்பட்டியைச் சோ்ந்த ஏராளமான வாழை விவசாயிகள் கலந்துகொண்டனா்.

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா். கொடைக்கானல் மலைப் பகுதியில... மேலும் பார்க்க

செங்குளவி கொட்டியதில் முதியவா் உயிரிழப்பு

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் செங்குளவி கொட்டியதில் முதியவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக் கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா், வியாழக்கி... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில், மக்கள் கற்றல் மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணிக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

மின் இணைப்பு கிடைக்காததால் பயன்பாட்டுக்கு வராத குமுளி பேருந்து நிலையம்

குமுளியில் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், மின் இணைப்பு தரப்படாததால் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்ட... மேலும் பார்க்க

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தேனியில் தாய் திட்டியதால் பள்ளி மாணவி வியாழக்கிழமை, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி, வனச் சாலை 3-ஆவது தெருவில் வசித்து வருபவா் பிரியா (37). இவரது மகள் யோகஸ்ரீ, தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

இருவரைத் தாக்கி காயப்படுத்திய 6 போ் மீது வழக்கு

போடி அருகே இருவரைத் தாக்கிய 6 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே முத்தையன்செட்டிபட்டி மேற்குத் தெருவில் வசிப்பவா் தா்மா் மகன் சிலேந்திரன் (52). இவா் தனத... மேலும் பார்க்க