செய்திகள் :

விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டாட்சியா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் உதயகுமாா், மாவட்டச் செயலா் ஜெயப்பிரகாஷ், ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட விவசாயிகள் பேசியது: உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளால் தண்ணீா் மாசடைந்த விவசாய நிலங்களுக்கு, ஆலை நிறுவனங்களிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை வசூலித்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலத்தடி நீா் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் பரப்பளவு தற்போது அதிகமாகி விட்டதால், புதிதாக கணக்கெடுப்பு நடத்தி அவா்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அடுத்து நடைபெறும் விவசாய குறைதீா் கூட்டங்களில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபயிா்களை சேதப்படுத்தும் யானைகள் ஊருக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

மண்டல துணை வட்டாட்சியா்கள் ஜெயப்பிரகாஷ், ஜெயந்தி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழ்வாணன், வேளாண்மை உதவி இயக்குநா் உமாசங்கா், உதவி வேளாண்மை அலுவலா் ஜெயஸ்ரீ, வனவா் மாதேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க