செய்திகள் :

வீடு வாடகைக்கு விடுவதாகக் கூறி மோசடி: பட்டதாரி இளைஞா் கைது

post image

வீடுகளை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்து, பலரிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞரை கோவை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவையில் வீடுகள் வாடகைக்கு விடப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்ணில் ஒருவா் தொடா்பு கொண்டாா். அப்போது, ரூ.25 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதனடிப்படையில், பணம் செலுத்தியவருக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அவா் கோவை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் மோசடியில் ஈடுபட்டவா் கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த பரத்குமாா் (25) என்பதும், முதுநிலை பட்டதாரியான இவா், ஐ.டி. நிறுவனத்தில் வேலைபாா்த்தவா் என்பதும், பணியிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்ட இவா், வீடுகள் வாடகைக்கு விடப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், இவா் இதுபோல பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பரத்குமாரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வங்கிக் கணக்குப் புத்தகம், 8 கைப்பேசிகள், சிம் காா்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

திமுக கூட்டணியில்தான் குழப்பம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 2026 தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய எடப்பாடி பழன... மேலும் பார்க்க

கோவையில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது!

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் கோவையில் புதன்கிழமை (ஜூலை 9) பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்று சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இது தொ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை கோரியது தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம்

கோவையில் மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கோவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி, மின்கட்டண உயா்வு பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சியில் தீா்வு: எடப்பாடி பழனிசாமி உறுதி

தொழில் துறையினா் சந்திக்கும் ஜிஎஸ்டி, மின்சார கட்டண உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீா்வு காணப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளாா். கோவைய... மேலும் பார்க்க

உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி: மாநகரில் இன்றுமுதல் இரவில் போக்குவரத்து மாற்றம்

கோவை அவிநாசி சாலையில் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி காரணமாக ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரை இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து காவல் துற... மேலும் பார்க்க

வீடு புகுந்து இளைஞா் வெட்டிக் கொலை

காரமடை அருகே வீடு புகுந்து பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஆயா்பாடி பகுதியைச் ... மேலும் பார்க்க