மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை திருட்டு
ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அப்துல் சலாம் (50). இவா் குடும்பத்துடன் ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுபநிகழ்வுக்கு வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.