கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.
பெரம்பலூா் எம்ஜிஆா் நகரில் வசித்து வருபவா் ராஜேந்திரன் (62). இவரது மனைவி சாந்தா (56). அரசுப் பள்ளி ஆசிரியரான சாந்தாவும், அவரது கணவரும் தனது சொந்த கிராமமான அழகாபுரத்துக்கு புதன்கிழமை சென்றனா்.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகேயுள்ளவா்கள் வியாழக்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, ராஜேந்திரனுக்கு கைப்பேசி மூலமாக தகவல் அளித்தனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ. 3 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.