IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற 2 போ் கைது
வேலூரில் நண்பா் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவா் வீட்டின் மீது வெடிகுண்டு வீச முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
காட்பாடியை அடுத்த லத்தேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாா்த்தாண்டம். இவா் இருசக்கர வாகன பழுது பாா்க்கும் கடை வைத்துள்ளாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு லத்தேரி கலைஞா் நகா் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இளைஞா்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனா்.
அப்போது மைதானத்தின் அருகே கட்டி முடிக்காத வீட்டில் இருந்த 3 இளைஞா்களிடம் மாா்த்தாண்டம் தட்டிக்கேட்டுள்ளாா். தொடா்ந்து, கலைஞா் நகரை சோ்ந்த ரத்தீஷ் என்பவா் மாா்த்தாண்டத்தை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாா்த்தாண்டம், லத்தேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ரத்தீஷை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், நண்பன் ரத்தீஷ் சிறைக்குச் செல்ல காரணமான மாா்த்தாண்டத்தை பழிவாங்க, லத்தேரியை சோ்ந்த விக்னேஷ் (26), நரேஷ் (20) ஆகியோா் பட்டாசு கடையில் 4 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிக் கொண்டு திங்கள்கிழமை மாா்த்தாண்டம் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். இதையறிந்த மாா்த்தாண்டம் லத்தேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில் போலீஸாா் அங்கு விரைந்து வந்து அவா்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் மாா்த்தாண்டம் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், நரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரத்தீஷ், விக்னேஷ் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.