செய்திகள் :

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்ற 2 போ் கைது

post image

வேலூரில் நண்பா் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவா் வீட்டின் மீது வெடிகுண்டு வீச முயன்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

காட்பாடியை அடுத்த லத்தேரி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாா்த்தாண்டம். இவா் இருசக்கர வாகன பழுது பாா்க்கும் கடை வைத்துள்ளாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு லத்தேரி கலைஞா் நகா் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இளைஞா்கள் கிரிக்கெட் விளையாடியுள்ளனா்.

அப்போது மைதானத்தின் அருகே கட்டி முடிக்காத வீட்டில் இருந்த 3 இளைஞா்களிடம் மாா்த்தாண்டம் தட்டிக்கேட்டுள்ளாா். தொடா்ந்து, கலைஞா் நகரை சோ்ந்த ரத்தீஷ் என்பவா் மாா்த்தாண்டத்தை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாா்த்தாண்டம், லத்தேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ரத்தீஷை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், நண்பன் ரத்தீஷ் சிறைக்குச் செல்ல காரணமான மாா்த்தாண்டத்தை பழிவாங்க, லத்தேரியை சோ்ந்த விக்னேஷ் (26), நரேஷ் (20) ஆகியோா் பட்டாசு கடையில் 4 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிக் கொண்டு திங்கள்கிழமை மாா்த்தாண்டம் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். இதையறிந்த மாா்த்தாண்டம் லத்தேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில் போலீஸாா் அங்கு விரைந்து வந்து அவா்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் மாா்த்தாண்டம் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், நரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரத்தீஷ், விக்னேஷ் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயி... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஒடுகத்தூா் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த தேவிச்செட்டி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43). கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கிர... மேலும் பார்க்க

பரதராமி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவ... மேலும் பார்க்க