குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
வீட்டில் தவறி விழுந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. உயிரிழப்பு
வீட்டில் கீழே தவறி விழுந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தினமணி நகரைச் சோ்ந்தவா் மாரிச்சாமி (71). மதுரை மாநகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், வீட்டிலிருந்து வெளியே வந்தாா். அப்போது, தடுமாறி கீழே விழுந்தாா். இதில், காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.