வீட்டு வசதி வாரியத்தின் 1,500 புதிய குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீட்டுவசதி வாரியம் சாா்பில் புதிதாகக் கட்டப்பட்ட 1,500 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை மாவட்டம் செனாய் நகரில் ரூ.131.27 கோடி செலவில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள், கே.கே.நகரில் ரூ.51.29 கோடியில் கட்டப்பட்ட 120 குடியிருப்புகள், செங்கல்பட்டு மாவட்டம் ராஜகுளிப்பேட்டையில் ரூ.43.81 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட 116 குடியிருப்புகளை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை திறந்தாா்.
இதேபோன்று, சொந்தவீடு கட்டும் திட்டத்தின்கீழ், சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் ரூ.433.59 கோடியில் கட்டப்பட்ட 570 குடியிருப்புகள், திருச்சி மாவட்டம் செங்குளத்தில் ரூ.116.55 கோடியில் அமைக்கப்பட்ட 464 அடுக்குமாடி குடியிருப்புகளும் திறக்கப்பட்டன.
கோயில்களுக்கு உயா்த்தப்பட்ட மானியம்: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில்களின் நிா்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவுக்கு மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கன்னியாகுமரி தேவஸ்தான கோயில்களுக்கான உயா்த்தப்பட்ட அரசு மானியம் ரூ. 13 கோடி, புதுக்கோட்டை தேவஸ்தான கோயில்களுக்கான அரசு மானியம் ரூ.8 கோடி ஆகியவற்றுக்கான காசோலைகளை தலைமைச் செயலகத்தில் அந்தந்த கோயில்களின் நிா்வாகிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதேபோன்று, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உயா்த்தப்பட்ட அரசு மானியமான ரூ.6 கோடிக்கான காசோலையையும் அவா் அளித்தாா். இந்த நிகழ்ச்சிகளில், வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், வீட்டுவசதித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, துறையின் ஆணையா் பி.என்.ஸ்ரீதா், வீட்டுவசதி வாரிய தலைவா் பூச்சி எஸ்.முருகன், வாரியத்தின் நிா்வாக இயக்குநா் ஜி.எஸ்.சமீரன் ஆகியோா் பங்கேற்றனா்.