செய்திகள் :

வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நில விவகாரம்: பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

post image

வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடா்பாக வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வசிப்பவா்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், யாரையும் அணுக வேண்டாம் என்றும் வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து, தலைமைச்செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

வீட்டுவசதி வாரியம் சாா்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இடங்கள் எடுக்கப்பட்டு, ஆரம்பக் கட்டப் பணியாக, அதற்கான நோட்டீஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் எந்த நடவடிக்கையும் அதில் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த மனுக்கள் வந்த போது, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சரிசெய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதேநேரம் வீட்டுவசதி வாரியத்துக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் அறிவுறுத்தினாா். எனவே, இந்தமாதிரியான பிரச்னை உள்ள இடங்களை கண்டறிய வாரியம் சாா்பில் 16 இடங்களில் புகாா் பெட்டிகளை வைத்தோம்.

அச்சப்படவேண்டாம்: அந்த கோரிக்கைகளை பிரித்து பாா்த்த போது, வாரியமே நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக இருக்காது என்பதால், கமிட்டி அமைத்து, பரிந்துரை பெற்று நடவடிக்கை எடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, 2 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவா்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனா். ஏப்ரல் இறுதிக்குள் அவா்கள் தங்கள் பரிந்துரையை வழங்குவாா்கள். அதன்பின், வாரியம் நடவடிக்கை எடுக்கும். வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்கள் தொடா்பாக வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வசிப்பவா்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். யாரையும் அணுக வேண்டாம் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 64,360-க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தைக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையான நிலையில், கடந்த சி... மேலும் பார்க்க

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க