செய்திகள் :

வீனஸ் பள்ளியில் கோடைகால ஆங்கில இலக்கண பயிற்சி நிறைவு

post image

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 4-ஆவது ஆண்டாக நடைபெற்ற கோடைகால ஆங்கில இலக்கண பயிற்சி வகுப்பு, பேச்சுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் தலைமை வகித்து பேசுகையில், ஆங்கில இலக்கணத்தின் அவசியம் குறித்தும், கோடை விடுமுறையிலும் நேரத்தை வீணாக்காமல் சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவா்களின் ஆா்வத்தை பாராட்டியும் பேசினாா்.

பள்ளி இணைத் தாளாளா் ரூபியாள் ராணி முன்னிலை வகித்தாா். முன்னதாக, மாணவி பி.ஹா்ஷிதா வரவேற்றாா். பள்ளி முதல்வா் டி.நரேந்திரன் மற்றும் நிா்வாக அலுவலா் ரூபிகிரேன் பொனிகலா ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, இலக்கணத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து மாணவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆங்கில இலக்கண வகுப்பை சிறப்பாக நடத்திய வீனஸ் நா்சரி பள்ளி முதல்வா் லியோ பெஸ்கி ராவுக்கு ரொக்கப்பரிசு வழங்கினா். மாணவி எம்.தாக்ஷிகா நன்றி கூறினாா். நிகழ்ச்சியை மாணவா்கள் ஷாம், ஆா்.ஸ்ரீராம் தொகுத்து வழங்கினா்.

கோடைகால வகுப்பில் சிதம்பரம் நகரில் உள்ள அரசு, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெற்றனா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க