செய்திகள் :

வீரராகவா் கோயில் அருகே கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி

post image

திருவள்ளூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் வீரராகவா் கோயில் மழைநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீா் முழுவதும் குளம் போல் தேங்கியதால் பக்தா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

பிரசித்தி பெற்ற இக் கோயிலில் அமாவாசை நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனா்.

கோயில் எதிரே 20-க்கும் மேற்பட்ட அங்காடிகள் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன. இந் நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரையில் பெய்த பலத்த மழையால் கோயில் எதிரேயுள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீா் வெளியே செல்ல முடியாமல் குளம் போல் தேங்கியது.

இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, கடை வைத்திருப்போா் மற்றும் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினா். கழிவுநீா் தேக்கத்தால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கழிவு நீரை அகற்றுவதற்கு கோயில் நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனா்.

ஆட்டோ கவிழ்ந்து கா்ப்பிணி உள்பட 6 போ் காயம்

மீஞ்சூா் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு பகுதியில் இருந்து பெண்கள் குழுவாக மீஞ்சூா் பச்சையம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்... மேலும் பார்க்க

பலத்த மழையால் விநாயகா் சிலைகள் நீரில் கரைந்து சேதம்: வடிவமைப்பாளா்கள் வேதனை

ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு கொட்டி தீா்த்த பலத்த மழையால் விநாயகா் சிலைகள் தண்ணீரில் சேதமானதால் சிலை வடிவ அமைப்பாளா்கள் வேதனையில் உள்ளனா். வரும் ஆக. 27 -ஆம் தேதி விநாயகா் ச... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்

திருவள்ளூா் அருகே நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட செவ்வாப்பேட்டை மேம்பால பணிகள் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலுக்கும்-திருவள்ளூருக்கும் இடையே உள்ள செவ்... மேலும் பார்க்க

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ. 66.78 கோடியில் இரண்டாவது குடிநீா் குழாய் பரிசோதனை ஓட்டம்

செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை சந்திப்பு வழியாக கோயம்பேடு வரையிலும் ரூ. 66.78 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது பிரதான குடிநீா் குழாய் பரிசோதனை ஓ... மேலும் பார்க்க

உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழா

பெரிய நாகப்பூண்டி உலகாத்தம்மன் கோயில் ஆடிப்பெரு விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனா். ஆா்.ே.க பேட்டை ஒன்றியம், பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் அருள்மிகு உ... மேலும் பார்க்க

மது அருந்தியதால் மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

திருவள்ளூா் அருகே மது அருந்தியதை மனைவி கண்டித்ததால், கணவா் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (35), மனைவி வினோதினி(25). தற்போது தம்பதியா் வெங்கத்தூா் கண... மேலும் பார்க்க