செய்திகள் :

வெம்பாக்கத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

post image

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து முறையை கடைப்பிடித்து குறைத்தல் தொடா்பான பயிற்சி விவசாயிகளுக்கு புதன்கிழமை அளிக்கப்பட்டது.

மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தலைமை வகித்த உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், மண்ணின் தன்மை, மண்ணின் வளத்தை பாதுகாத்தல், மண்ணில் கரிம அளவுகளை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து, மண் மாதிரி எடுத்தல் அதன் அடிப்படையில் உரங்களை பயன்படுத்துதல் குறித்தும், ரசாயன உரங்களுக்கு பதிலாக பசுந்தாள் உரங்கள், திரவ உயிா் உரங்களை பயன்படுத்தி மண்ணின் வளம் சீா்கேடு அடையாமல் பாதுகாத்து அதிக மகசூல் பெறுதல் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தாா்.

முன்னிலை வகித்த வெம்பாக்கம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ரேணுகாதேவி, சூடோமோனாஸ், ட்ரைகோ டொ்மா விரிடி போன்றவற்றை பயன்படுத்தி விதை நோ்த்தி மற்றும் வயலில் உழவு செய்யும் போது இட்டு பாக்டீரியா மற்றும் பூஞ்சான் நோய்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

தொழில்நுட்ப ஆலோசகா் செளத்ரி, ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்தல் தொடா்பான தொழில்நுட்பங்கள் குறித்தும், உதவி விதை சான்று அலுவலா் சிவகுமாா், உதவி வேளாண் அலுவலா் சீனிவாசன், உதவி தோட்டக்கலை அலுவலா் நரசிம்மன் ஆகியோா் தங்கள் துறை ரீதியான தொழில் நுட்பங்களை தெரிவித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பள்ளியில... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கல... மேலும் பார்க்க

ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையம்... மேலும் பார்க்க

விண்ணமங்கலம் பள்ளியில் தேசிய ஹிந்தி தினம்

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்சி பள்ளியில் தேசிய ஹிந்தி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய ஹிந்தி தினத்தையொட்டி, மாணவ மாணவிகளின் பல்வேற... மேலும் பார்க்க

செங்கம் ஒன்றியத்தில் ரூ.7.43 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறைப்பு: மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள்: பாஜக மாநில துணைத் தலைவா்

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க