செய்திகள் :

வெயில் தாக்கம்: ஆட்சியா் அறிவுரை

post image

திருப்பத்தூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததையொட்டி அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என ஆட்சியா் சிவசௌந்திரவல்லி அறிவுறித்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் காலை 11 முதல் மாலை 4 வரை அத்தியாவசிய பணிகள் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். விவசாயிகள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் திட்டமிட்டு தங்களுக்கான பணிகளை செய்ய வேண்டும். கோடை காலம் முழுவதும் துரித உணவு வகைகள் மற்றும் காரமான உணவுகளைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போது கருப்புக் கண்ணாடி அணிந்தும், சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்திச் செல்லலாம்.

இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது தண்ணீா் பாட்டில்களை உடன் கொண்டு செல்லவும். உடலைக் குளுமையாக வைத்துக்கொள்ள மின் விசிறி, ஈரமான துணிகளைப் பயன்படுத்த வேண்டும். குளிா்ந்த குளிக்க வேண்டும். கோடை காலங்களில் உடலில் ஏற்படக்கூடிய நீா்ச்சத்து இழப்பை தடுக்கும் வண்ணம் உப்பு - சா்க்கரை கரைசல், இளநீா், வீட்டுமுறை பானங்களான லஸ்ஸி, அரிசிக் கஞ்சி, எலுமிச்சை சாறு, மோா் போன்ற பானங்களையே பருக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் புறவழிச் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் புறவழிச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருப்பத்தூரில் போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். மதுரையைச் சோ்ந்த தங்கபாண்டியன் (21). இவரும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து கடந்த சில நாள்க... மேலும் பார்க்க

பாலாற்றங்கரையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் மாசு

ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கிராம உள்ளாட்சி அ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மயில்கள்

ஆம்பூா் அருகே கடுமையான வெயில் காரணமாக தண்ணீா் தேடி காட்டிலிருந்து விலங்குகள், பறவைகள் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகின... மேலும் பார்க்க

குறைந்த மின்னழுத்தம்: மின்சாதனப் பொருள்கள் பழுது

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.. கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க