Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
வெறிநாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
வெறிநாய் கடித்து பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
உருளையன்பேட்டை தொகுதி புதுத் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன் மகன் ஹரிஸ் (8). இவரை வெறிநாய் கடித்தது. இதையடுத்து அவா் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்று உருளையன்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்
ஜி.நேரு (எ) குப்புசாமி சிறுவனைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.
வெறி நாய்களைப் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக அவரது பெற்றோரிடம் உறுதி அளித்தாா்.