செய்திகள் :

வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரி வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் சோதனை!

post image

வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகின்றனவா என வருவாய்த் துறையினா் புதன்கிழமை (பிப்.5) சோதனை செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் வருவாய் கோட்டம் கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது. இங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களை நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு வருவதை தடை செய்யும் விதமாக கூடலூரை அடுத்துள்ள மலப்புரம் மாவட்ட எல்லையான நாடுகாணி, வயநாடு மாவட்ட எல்லைகளான சோலாடி, நம்பியாா்குன்னு, அய்யன்கொல்லி, எருமாடு, பாட்டவயல் மற்றும் கா்நாடகா எல்லையான கக்கநல்லா ஆகிய சோதனைச் சாவடிகளில் தனியாா் வாகனங்களையும் சுற்றுலா வாகனங்களையும் நிறுத்தி வருவாய்த் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது வாகனங்களில் கொண்டுவந்த பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

நாடுகாணி எல்லை சோதனைச் சாவடியில் வாகனங்களில் பிளாஸ்டிக் சோதனை செய்யும் வருவாய்த் துறையினா்.

உதகை வனப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கிய 3 பேருக்கு அபராதம்

உதகை அருகே வனப் பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரில் கூடாரம் அமைத்து நெருப்பு மூட்டி குளிா் காய்ந்த மூவருக்கு வனத் துறையினா் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனா். உதகை குந்தா வனச் சரகம், தாய்சோலை பிரிவு, பிக... மேலும் பார்க்க

உதகை நுண்உரம் செயலாக்க மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட பழைய உதகை நுண்உரம் செயலாக்கும் மையம், காந்தல் வளமீட்பு மையம் மற்றும் தீட்டுக்கல் உரக் கிடங்கு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவ... மேலும் பார்க்க

உதகை கால்ஃப் மைதான வனப் பகுதியில் தீ!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கால்ஃப் மைதானம் அருகே உள்ள வனத்தில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது. உதகையில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த சூழலில் கால்ஃ... மேலும் பார்க்க

வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் உயிரிழப்பு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்தன. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் ஒரு புலியும், குறிச்சியாடு வனப் பகுதியில் இரண்டு ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ.

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனா். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் வாழும் மக... மேலும் பார்க்க

தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை சடலம்!

கூடலூா் அருகே ஆணை செத்தக்கொல்லி பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்தில் உள்ள ஆணை செ... மேலும் பார்க்க