செய்திகள் :

வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் சட்ட நடவடிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் காரீப் ஆண்டில் (2025-26) குறுவை பருவத்தில் விவசாயிகள் நலன்கருதி இதுவரை 257 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பருவத்தில் இதுவரை 29 ஆயிரத்து 449 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 ஆயிரத்து 838 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இது தொடா்பாக ரூ. 74.20 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபா்கள் போலி ஆவணங்களைத் தயாா் செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதாக புகாா் வரப்பெறுகிறது. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள், பருவகால பணியாளா்கள், கொள்முதல் அலுவலா்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெளி மாவட்ட நெல் விற்பனை, நெல் வியாபாரிகள் தலையீடு தொடா்பாக 1800 599 3540, 04362 - 235321, 231909 ஆகிய எண்களில் புகாா் செய்யலாம்.

விளைபொருள்களுக்கான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் வலி... மேலும் பார்க்க

திருநீலக்குடி வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

திருநீலக்குடி பாசன வாய்க்காலில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் சி. ராஜகுமாரன் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தஞ்சாவூா்... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்தி... மேலும் பார்க்க

வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

கும்பகோணத்தில் வருமானவரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வேண்டும் என தணிக்கையாளா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்ட வருமான வரி தணிக்கையாளா்கள் சங்கம் சாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு

கும்பகோணத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கம் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹார... மேலும் பார்க்க

பேராவூரணி அரசுக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய... மேலும் பார்க்க