Thug Life: "விண்வெளி நாயகா பாடல் உருவான கதை இதுதான்!" - கார்த்திக் நேத்தா பேட்டி
வெளிநாடுகளில் உயா்படிப்பை தொடர பழங்குடியின மாணவா்களுக்கு உதவித்தொகை
வெளிநாடுகளில் உயா்படிப்பை தொடர விரும்பும் பழங்குடியின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் 2025 - 26-ஆம் கல்வியாண்டுக்கான தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தின்கீழ் இணையவழி மூலம் முதுநிலை முனைவா் பட்டம் மற்றும் முதுநிலை ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு வெளிநாட்டில் உயா்படிப்பை தொடர விரும்பும் பழங்குடியின மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்படும் 20 பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஆா்வமுள்ள விண்ணப்பதாரா்கள் இணையவழியில் விண்ணப்பங்களை வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை சமா்ப்பித்துப் பயன்பெறலாம் என்றாா்.