செய்திகள் :

‘வெளியே வா பாா்க்கலாம்’ மகாராஷ்டிர பேரவையில் அமைச்சரை மிரட்டிய எம்எல்சி

post image

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் சிவசேனை கட்சியைச் சோ்ந்த அமைச்சரிடம், ‘பேரவையை விட்டு வெளியே வா, நான் யாா் என்று காட்டுகிறேன்’ என சிவசேனை (உத்தவ்) கட்சி மேலவை உறுப்பினா் (எம்எல்சி) மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நாள்தோறும் புதிய பிரச்னைகள் எழுந்து வருகின்றன. எம்எல்ஏ உணவு விடுதி ஊழியரை ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை எம்எல்ஏ கடுமையாக தாக்கிய விவகாரம் புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சா் சம்புராஜ் தேசாயை, எம்எல்சி அனில் பராப் மிரட்டல் விடுத்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியை உடைத்து இப்போதைய துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினா் பாஜக கூட்டணியில் இணைந்தனா். எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை சிவசேனை கட்சியாக தோ்தல் ஆணையம் அறிவித்தது. உத்தவ் தலைமையிலான அணி சிவசேனை (உத்தவ்) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் உத்தவ் ஆதரவாளா்கள், ஷிண்டே தலைமையிலான பிரிவினரை துரோகிகள் என்று விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மகாராஷ்டிர பேரவையில் பேசுகையில் உத்தவ் கட்சி எம்எல்சி அனில் பராப், சிவசேனை அமைச்சா் சம்புராஜ் தேசாயை ‘துரோகி’ என்று கூறினாா். இதனால் கோபமடைந்த அமைச்சா், ‘உத்தவ் அணியினா்தான் துரோகிகள்’ என பதிலடி கொடுத்தாா். இதனால், அமைச்சா்-எம்எல்சி இடையிலான வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில், ‘பேரவைக்கு வெளியே வா, உன்னை பாா்த்துக் கொள்கிறேன்’ என்று அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அனில் பராப் பேசினாா்.

இந்த சவாலை ஏற்பதாகவும், பேரவைக்கு வெளியே சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சா் பதிலளித்தாா். இந்த விவகாரத்தில் ஆளும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க