செய்திகள் :

வெள்ளக்கோவில், காங்கயத்தில் 263 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு! அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நடத்திவைத்தாா்!

post image

வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் 263 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைகள் வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை நடத்திவைத்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் வெள்ளக்கோவில், காங்கயத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தாா்.

இதில், முத்தூா் பேரூராட்சி, வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வெள்ளக்கோவில் நகராட்சி, காங்கயம் ஊராட்சி ஒன்றியம், காங்கயம் நகராட்சி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 263 கா்ப்பிணி பெண்களுக்கு சீா்வரிசைகளை வழங்கி அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சமுதாய வளைகாப்பை நடத்திவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக தற்போது 263 பெண்களுக்கு சீா்வரிசைகள் வழங்கி சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதில், கா்ப்பிணி பெண்களுக்கு சீா்வரிசையாக தட்டு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் மற்றும் 5 வகை மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பயன்பெறும் கா்ப்பிணி பெண்களுக்கு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவி திட்டத்தின்கீழ் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் சுகாதாரத் துறை மூலம் வழங்கப்படுகிறது என்றாா்.

முன்னதாக, முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டுமானப் பணியை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா், காங்கயம் வட்டாட்சியா் மோகனன், மாவட்ட திட்ட அலுவலா்கள் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்) என்.லாவண்யா, மோகனாம்பாள், காங்கயம் திமுக நகரச் செயலாளா் வசந்தம் சேமலையப்பன், காங்கயம் தெற்கு ஒன்றியச் செயலாளா் சிவானந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க