செய்திகள் :

வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்தார் மோடி!

post image

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப்பை புதன்கிழமை (உள்ளூர் நேரப்படி) நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவு, வரி விதிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து இரண்டு நாள் பயணமான பிப். 12-ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை தொழிலதிபர் எலான் மஸ்க், மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை கட்டியணைத்து டிரம்ப் வரவேற்றார்.

இதையும் படிக்க : எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை

டிரம்ப்புடனான சந்திப்பு குறித்து மோடி தெரிவித்ததாவது:

"சிறப்பான வரவேற்பு அளித்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதியை மீட்டெடுக்க டிரம்ப் முயற்சிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம் (மேக் அமெரிக்கா கிரேட் எகைன் - MAGA) என்ற டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இதேபோல இந்தியாவை சிறந்த நாடாக்கும் வளர்ந்த இந்தியாவை நோக்கி நாமும் பயணித்துக் கொண்டுள்ளோம். அமெரிக்க மொழியில் மேக் இந்தியா கிரேட் எகைன் (MIGA).

இரண்டு ஜனநாயாக சக்தியையும் ஒன்றிணைந்து மெகா (MEGA) கூட்டணியை உருவாக்கி செழிப்பான நாடாக உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார்.

ஆர்டிஐ-ன் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரக் கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணை!

அரசியல் கட்சிகளை ஆர்டிஐ-ன் கீழ் கொண்டுவர உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மேலும் 2 பேருக்கு ஜிபிஎஸ்: மொத்த பாதிப்பு 205!

மகாராஷ்டிரத்தில் ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 205-ஐ எட்டியுள்ளது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் மேலும 2 பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு க... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நி... மேலும் பார்க்க

மெட்ரோ கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி பெங்களூருவில் மஜத ஆர்ப்பாட்டம்

மெட்ரோ ரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறக் கோரி, சுதந்திர பூங்காவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெள்ளிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பெங்களூரு பிரிவு தலைவர் எச்.எம். ரமேஷ் கௌடா ... மேலும் பார்க்க

ஏக்நாத் ஷிண்டே வருகையின் போது டிரோன் பறக்கவிட்ட 2 பேர் கைது

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வருகையின்போது ரோன் பறக்கவிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், ஹிவாலியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ... மேலும் பார்க்க

கேரளம்: பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கி கொள்ளை

கேரளத்தில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், சாலக்குடி அருகே வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை நுழைந்த நபர் ஒருவர் கத்தி முனையில் கொள... மேலும் பார்க்க