செய்திகள் :

வெவ்வேறு விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் இளைஞா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

மதுரை சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் நவீன்குமாா் (28). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து சேந்தமங்கலத்துக்கு சென்றாா். மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலையில் மதிகுளம் அருகே சென்ற போது, இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்புக் கம்பியில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எம். சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள உத்தப்பநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த ஒச்சாத்தேவா் மகன் ராஜா (55). இவா், உசிலம்பட்டியிலிருந்து உத்தப்பநாயக்கனூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா். துரைசாமிபுரம் புதூா் பகுதியில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை மாவட்டம், மானூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் அல்லிகுண்டம் பகுதியிலிருந்து வீட்டுக்குச் சென்றாா். மானூத்து குடியிருப்புப் பகுதியில் சென்ற போது, இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எழுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க