செய்திகள் :

வேகமாக வளா்ச்சியடையும் பொருளாதார நாடாக தொடரும் இந்தியா: ஆா்பிஐ

post image

வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடா்வதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பொருளாதார அடிப்படைகள், வலுவான நிதித் துறை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் மூலம் இந்த வளா்ச்சி சாத்தியமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்பிஐ வியாழக்கிழமை வெளியிட்ட 2024-25-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சிறந்த பொருளாதார அடிப்படைகள், வலுவான நிதித் துறை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான நடவடிக்கைகள் காரணமாக, 2025-26-ஆம் ஆண்டிலும் வேகமாக வளா்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாக நிகழாண்டிலும் இந்தியா தொடா்கிறது.

நிதித் துறையின் வலிமை, நன்கு மூலதனமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்டவையும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு வலு சோ்த்தன.

கடந்த மாா்ச் மாதம் வரையிலான நிலவரப்படி, அந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் மட்டும் 33 சதவீத லாபம் கிடைத்ததன்மூலம் ஆா்பிஐ-யின் நிதிநிலை ரூ. 76.25 லட்சம் கோடியாக உயா்ந்தது. இதன்மூலம், மத்திய அரசுக்கு ரூ.2.7 லட்சம் கோடி ஈவுத்தொகையாக அளிக்கப்பட்டது.

ரூ. 6,372 கோடி செலவு: 2024-25-ஆம் ஆண்டு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 86 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சற்று குறைவுதான். அதே நேரத்தில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் 40.9 சதவீதம் ரூ.500 நோட்டுகளே உள்ளன. இதற்கு அடுத்து ரூ.10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதம் புழக்கத்தில் உள்ளன.

குறைந்த மதிப்புள்ள நோட்டுகளான ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகியவற்றின் எண்ணிக்கை மொத்தம் 31.7 சதவீதமாக உள்ளது.

புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 6 சதவீதமும், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 5.6 சதவீதமும் உயா்ந்துள்ளது.

மே 2023-இல் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. 2025, மாா்ச் 31 வரை 98.2 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்குத் திரும்பிவிட்டன. இதன் மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாகும்.

ரூ.2, ரூ.5 நோட்டுகளை அச்சிடுவதை ஆா்பிஐ ஏற்கெனவே நிறுத்திவிட்டது. 2024-25-இல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 4.7 சதவீதம் கள்ள நோட்டுகள் வங்கிகளால் அடையாளம் காணப்பட்டு கைப்பற்றப்பட்டன. ரூ.500, ரூ.200 நோட்டுகளே அதிக அளவில் கள்ளநோட்டுகளாக அச்சிடுப்படுகின்றன.

ரூபாய் நோட்டில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்துள்ளதால் அதை அச்சிடுவதற்கு ஆகும் செலவும் அதிகரித்தே வருகிறது.

2023-24-ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரூ. 5,101.4 கோடி செலவான நிலையில், 2024-25-ஆம் ஆண்டில் 25 சதவீதம் கூடுதலாக ரூ. 6,372.8 செலவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

வங்கி சாா்ந்த முறைகேடுகள்

மூன்று மடங்கு அதிகரிப்பு

‘வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாமல் இருப்பது, எண்ம முறைப் பரிமாற்றத்தில் பணம் பறிப்பு வரை வங்கி சாா்ந்த மோசடிகள் 2024-25 நிதியாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் ரூ.36,014 கோடி அளவுக்கு வங்கிப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். இதனால், பொதுத் துறை வங்கிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகளில் அதிக அளவு கடன் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது. தனியாா் வங்கிகளின் கடன் அட்டைகள், இணையவழியில் அதிக மோசடி நடைபெற்றுள்ளது’ என ஆா்பிஐ ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டுமா? ரூ.500 கள்ளநோட்டுப் புழக்கம் 37% அதிகரிப்பு: ஆர்பிஐ கவலை

நாட்டில் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37% கூடுதலாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.2024 - 25ஆம் நிதியாண்டில் மட்டும் நாட்டில் 1.18 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டு... மேலும் பார்க்க

நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹாசனின் கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில், "அனைவரின் மதிப... மேலும் பார்க்க

பெண்களுக்கு குங்குமம் அளிப்பதா? பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தைக் கொண்டாடும் வகையிலான பிரசார நடைப்பயணங்களில் பெண்களுக்கு குங்குமம் (செந்தூரம் - சிந்தூர், ஆபரேஷன் சிந்தூரை நினைவுபடுத்தும் விதத்தில்) வழங்குவது என்ற ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், சகேரி விமான நிலையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மிகவு... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

வருகிற ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் முதுநிலைத் தேர்வு வருகிற ஜூன் 15 ஆம் தேதி இரண்டு ஷிப... மேலும் பார்க்க

பஞ்சாபில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பலி, 27 பேர் காயம்

பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் மற்றும் மீட்புக் ... மேலும் பார்க்க