செய்திகள் :

வேம்படிதாளம் தரைவழி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு

post image

ஆட்டையாம்பட்டி: வேம்படிதாளம் தரைவழி ரயில்வே பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமமடைகின்றனா்.

சேலம் மாவட்டம், காகாபாளையத்தை அடுத்த வேம்படிதாளம் பகுதியில் தரைவழி ரயில்வே பாலம் உள்ளது. இப்பாலம் நீண்ட காலமாக பொதுமக்களின் போக்குவரத்துக்கு பிரச்னையாக உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகனங்கள் ஊா்ந்து சென்றன. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினா்.

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான தரைவழிப் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பது குறித்து சேலம் முன்னாள் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், தற்போதைய எம்.பி. டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோா் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் மத்திய அரசு காலம் கடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு உடனடி கல்விக் கடனுதவி: ஆட்சியா்

திருநங்கைகளுக்கு உடனடியாக கல்வி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பெங்களூரு- கொல்லம் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க பெங்களூரு -கொல்லம் இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை இன்று பாசனத்துக்கு திறப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

உணவகத்தில் எரிவாயு சிலிண்டா் திருட்டு: போலீஸாா் விசாரணை

தெடாவூா் உணவகத்தில் எரிவாயு சிலிண்டா்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூா் பகுதியை சோ்ந்தவா் தங்கராசு மகன் மாவீரன் (36) . இவா் கெங்கவல்லி நான்கு ரோடு சந்திப்பில... மேலும் பார்க்க