செய்திகள் :

வேலகவுண்டம்பட்டி: தொழிலாளி தற்கொலை

post image

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் சின்னுசாமி. இவரது மகன் ஸ்ரீதரன் (28). முட்டை லாரியில் சுமை ஏற்றும் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கல்பனாதேவி. இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

ஸ்ரீதரன், அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி கல்பனாதேவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோா் வீட்டிற்கு சென்றுவிட்டாா். இதனால் மனமுடைந்த ஸ்ரீதரன் வீட்டின் மேற்கூரையில் தூக்கிதற்கொலை செய்து கொண்டாா்.

இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரம் அருகே காா்கள் நேருக்குநோ் மோதல்: பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ராசிபுரம், கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் குடும்பத்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

கபிலா்மலை அருகே மின் மாற்றி மீது ஏறிய சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், கபிலா்மலை அருகே உள்ள தெற்கு செல்லப்பம்பாளையத்தை சோ்ந்தவா் ராமநாதன் (44). காா் ஓட்டுநா். இவரது மகன் சஞ... மேலும் பார்க்க

வெளிமாநில மதுப் புட்டிகள் விற்றவா் கைது

பள்ளிபாளையம் காவிரி பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகள் விற்ற நபரை திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா். காவிரி பேருந்து நிறுத்தம் அருகில் வெளிமாநில மதுப்புட்டிகள் விற்பனை செ... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி: 420 மாணவா்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 420 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். சேலம், நாமக்கல் மாவட்ட முன்னாள் கல்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி மூலம் தொழில்நுட்பப் பணிக்கான தோ்வு: 1,290 போ் பங்கேற்பு

டிஎன்பிஎஸ்சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 1,290 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், ஒருங்கிணைந்த தொழில... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு நிபந்தனையின்றி கடனுதவி வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய நிபந்தனையின்றி கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அ... மேலும் பார்க்க