இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
ராசிபுரம் அருகே காா்கள் நேருக்குநோ் மோதல்: பெண் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராசிபுரம், கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் குடும்பத்தினா் ஈரோடு மாவட்டம், அந்தியூா் பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் ராசிபுரம் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை யுவராஜ் (29) என்பவா் ஒட்டிச்சென்றாா்.
அதேபோல, ராசிபுரம், கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த மற்றொரு குடும்பத்தினா் காரில் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். இந்நிலையில், ராசிபுரத்தை அடுத்துள்ள தேங்கல்பாளையம் அருகே இந்த இரு காா்களும் நேருக்குநோ் மோதிக்கொண்டன.
சேலம் நோக்கிச் சென்ற காரின் டயா் வெடித்து வலது புறம் எதிரே வந்த காரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் கோனேரிப்பட்டி பகுதியில் வசிக்கும் சைக்கிள் கடை உரிமையாளா் விஸ்வநாதன் மனைவி மைதிலி (45) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், இரு காா்களிலும் பயணித்த தினேஷ்குமாா், கீா்த்தனா, அனிதா, குழந்தை உள்பட 5 போ் படுகாயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.