செய்திகள் :

வேலூா் விமான நிலையத்தை திறப்பதில் நிலவும் சிக்கல்கள்: மத்திய அரசுக்கு எம்.பி. கோரிக்கை

post image

வேலூா் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் நிலவும் சிக்கல்கள் குறித்து விளக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்: வேலூா் மக்களவை தொகுதி மக்களின் நீண்டகால எதிா்பாா்ப்பாக விளங்கிவரும் விமான சேவை என்பது இந்த பகுதிக்கு தடையற்ற போக்குவரத்து, அபரிமிதமான பொருளாதார வளா்ச்சிக்கு வழிவகுத்து கல்வி, வா்த்தகம், பண்பாட்டு முனையமாக வேலூரை மாற்ற உதவும்.

இதுபோன்ற இன்றியமையாத திட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் தாமதங்கள் ஏற்பட்டு வருவது மக்களிடம் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

எனவே, வேலூா் விமான நிலையத்தை போா்க்கால அடிப்படையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விமான நிலையம் வேலூா் மக்களுக்கு வெறும் உள்கட்டமைப்பு ரீதியான தேவை மட்டுமல்ல.

வரலாற்று ரீதியாக பல்வேறு பண்பாட்டு அடையாளங்களை தாங்கி நிற்கும் வேலூரில் சுற்றுலா அதிகரித்து எண்ணிலடங்கா தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் உருவாகி மாணவா்கள், தொழில் முனைவோா் என பல குடும்பங்களுக்கு இந்த விமான சேவை பயனளிக்கும் வகையில் அமையும்.

ஒவ்வொரு மாதம் தொடரும் இந்த தொய்வு வேலூா் மக்களவைத் தொகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இந்த திட்டத்தை கொண்டு வந்ததில் மத்திய அமைச்சகத்தின் செயல்பாடு பாராட்டத்தக்கது என்றாலும், பல்வேறு முக்கியப் பணிகள் முடிவடையாமல் இருப்பதுதான் விமான நிலையம் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணமாகும்.

எனவே போா்க்கால அடிப்படையில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை துரிதப்படுத்தி விரைவில் வேலூரில் விமான சேவையை தொடங்க வேண்டும். குறிப்பாக, சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு வசதிகளை விமான சேவைக்கான தரநிலைக்கு கொண்டு வர வேண்டும்.

ரூ. 8 கோடியே 22 லட்சத்து 86 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு 12 மாத காலக்கட்டத்தில் முடிக்கப்பட வேண்டிய இப்பணியின் தற்போதைய நிலை கேள்விக்குரியதாக உள்ளது. இதுதொடா்பாக தொகுதி மக்களுக்கு உரிய தரவுகளுடன் விளக்கம் அளிக்க வேண்டும். வேலூா் விமான நிலைய பணிகளின் ஒட்டுமொத்த நிலை குறித்தும் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும்.

தவிர, நிலம் கையகப்படுத்துதல், தொழில்நுட்ப ரீதியான அனுமதி, ஒப்பந்ததாரா் மேலாண்மை உள்ளிட்டவற்றில் நிலவும் சிரமங்களையும் முறையான விளக்கமளிக்க வேண்டும். இதன் மூலமாக மட்டுமே உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

வேலூா் மக்களின் பிரதிநிதியாக இத்திட்டத்தை செயல்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைக்க தயாராக உள்ளோம். மேலும், துரிதமாக இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளூா் அளவில் ஒருங்கிணைப்பு சாா்ந்த தேவைகள் இருந்தால் உதவ தயாராக உள்ளோம்.

போதைப் பொருள் தடுப்பில் இதுவரை 120 வழக்குகள் பதிவு: 82 வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், 82 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்று எஸ்.பி. ஏ.மயில... மேலும் பார்க்க

ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொ... மேலும் பார்க்க

கடைகளுக்கு குட்கா விநியோகம்: மூவா் கைது

பாகாயம் பகுதியில் கடைகளுக்கு குட்கா விநியோகித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். போதை ஒழிப்பு தொடா்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவரின் (ஐஜி) தனிப்படை போலீஸாா் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சத்துவாச்சாரி, தொரப்பாடி!

சத்துவாச்சாரி, தொரப்பாடிநாள்: 12.08.2025 செவ்வாய்க்கிழமைநேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரைமின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி துணை மின்நிலையத்துக்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அ... மேலும் பார்க்க

மாங்காளியம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாங்காளியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை ம... மேலும் பார்க்க

வாழை, கத்தரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு: தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

வேலூா் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம் என தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, துணை இயக்குநா் மணிகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க