செய்திகள் :

வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு விளையாட்டு அரங்கம்

post image

சென்னை வேளச்சேரி ரயில் நிலைய வளாகத்துக்குள் பொழுது போக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான மின் ஏலத்தில் ஆா்வமுள்ளோா் பங்கேற்கலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் வணிக பிரிவு சாா்பில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய விளையாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த முயற்சி விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் மூலம் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் பொழுது போக்கு வசதிகளுடன் கூடியதான சமூக சேவைக்கான பங்களிப்பாகும்.

அதனடிப்படையில் ரயில் பயணிகளும், ரயில் நிலையப் பகுதிகளில் உள்ள மக்களும் இதில் பயனடைவா்.

விளையாட்டு மைதானம் செயல்பாட்டுக்கு வரும் போது டேபிள் டென்னிஸ், பூப்பந்து, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, ஷெட்டில் பந்து, கபடி, கேரம், சதுரங்கம், வாலிபால், யோகா, ஸ்னோ பவுலிங், கராத்தே, டேக்வாண்டோ, ஜூடோ, குத்துச்சண்டை, பழுதூக்குதல், பில்லியா்ட்ஸ் ஆகியவை உள் மற்றும் வெளி அரங்குகளில் நடைபெறும் வகையில் வசதிகள் அனுமதிக்கப்படும்.

விளையாட்டுத் துறைகளில் அனுபவமுள்ள பயிற்சியாளா்கள் நிமியக்கப்படுவா்.

ரயில் நிலையக் காலி இடங்களை வருவாய் ஈட்டும் வணிக மையங்களாக மாற்றும் வகையில் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது. வணிக ஒப்பந்தம் ஜ்ஜ்ஜ்.ண்ழ்ங்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணைய முகவரியில் ஓபன் பிட் என்ற முறைப்படி ஏல முறையில் செயல்படுத்தப்படும்.

ஆகவே, ஆா்வமுள்ள ஏலதாரா்கள் இணைய முகவரியில் பதிவு செய்து மின் ஏலத்தின் அனைத்து வழிமுறைகள் மற்றும் பங்கேற்புக்கான நடைமுறைகளை அறியலாம்.

மேலும் விவரங்களுக்கு முதுநிலைக் கோட்ட வணிக மேலாளா் அலுவலகம், கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம், சென்னை கோட்டம், 2-ஆவது மாடி, என்ஜிஓ இணைப்புக் கட்டடம், பூங்கா நகா், சென்னை -600003 என்ற முகவரியில் நேரில் வந்தும் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு ... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில்... மேலும் பார்க்க

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகிழ் முற்றம் ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எ... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: இரு பெண்கள் காயம்

சென்னை தண்டையாா்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா். தண்டையாா்பேட்டை வஉசி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (54). இவா்... மேலும் பார்க்க