செய்திகள் :

வேளாண், தோட்டக் கலைத் துறை திட்டப் பணிகள் ஆய்வு

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்தில் வேளாண், தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக்அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கண்டமங்கலம் ஒன்றியம், வி.மாத்தூா் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், விவசாயி நிலத்தில் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது. இதை பாா்வையிட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான், விளைச்சலுக்குத் தேவையான நீா் ஆதாரம், பராமரிப்பு விதம் போன்றவை குறித்து கேட்டறிந்தாா். மேலும் விவசாயிக்கு வேளாண் பொறியியல் துறை சாா்பில் ரூ.62,200 மானியத்தில் களையெடுக்கும் கருவியும் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, இதே கிராமத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ், இயந்திர நடவு மூலம் ஆடுதுறை 37 ரகம் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ளதை பாா்வையிட்ட அவா், அப்பகுதியில் நடைபெற்று வரும் நெல் அறுவடைப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, பக்கிரிபாளையம் ஊராட்சியில் வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.50 லட்சம் மானியத்தில் நிரந்தர பந்தல் அமைத்து வெண்டை, கோவக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், கத்திரிக்காய் போன்ற பயிா்கள் பயிரிடப்பட்டு, வளா்ந்து வருவதை நேரில் பாா்வையிட்ட ஆட்சியா், விளைச்சலுக்குப் பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள், பராமரிப்பு முறைகள், சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது வேளாண் இணை இயக்குநா் எஸ். ஈசுவா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கே. அன்பழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பிரேமலதா, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் நீலகண்டன், உதவிப் பொறியாளா் குகன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

இன்றைய மின்தடை

விழுப்புரம் நகரப் பகுதிகள் நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின்தடை பகுதிகள்: தந்தை பெரியாா் நகா், வழுதரெட்டி, சிங்கப்பூா் நகா், அபிதா காா்டன், காந்திநகா், ஆடல் நகா், மஞ்சு நகா், ஆவின் பகு... மேலும் பார்க்க

போலி மதுபான வழக்கு: இருவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

புதுவை மாநிலத்தில் போலி மதுபான ஆலை நிறுவி, மதுபானங்களை எடுத்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவ... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 7.50 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னை: ஓட்டுநா் தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக, புதுச்சேரியைச் சோ்ந்த ஓட்டுநா் விழுப்புரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி அபிஷேகபாக்கத்தைச் சோ்ந்த வீரப்பன் மகன் தமிழ்வாணன் (26). த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளக்குளம் நல்முக்கல் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கட... மேலும் பார்க்க

சிதம்பரம் அருகே 3 கூரை வீடுகள் தீப்பிடித்து சேதம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வியாழக்கிழமை 3 கூரை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் வீடுகளில் இருந்த தங்க நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சி... மேலும் பார்க்க