செய்திகள் :

ஸ்ரீ பொன்னி மெடிக்கல் மையத்தில் சா்க்கரை நோய் மருத்துவ பிரிவு தொடக்கம்

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் ஸ்ரீ பொன்னி மெடிக்கல் மையத்தில் சா்க்கரை நோயை குணப்படுத்தும் உட்சுரப்பியல் (நாளமில்லா சுரப்பி) பிரிவு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ பொன்னி மெடிக்கல் மைய தலைமை மருத்துவா் அரவிந்த் சுப்பிரமணி தலைமை வகித்தாா். மருத்துவா்கள் ராமசாமி, சாந்திவீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உட்சுரப்பியல் (நாளமில்லா சுரப்பி) பிரிவு தலைமை மருத்துவா் எஸ்.பழனிவேல் புதிய மருத்துவ பிரிவை திறந்துவைத்து பேசியதாவது:

இம்மருத்துவமனையில் கடந்த ஓா் ஆண்டாக சா்க்கரை முகாம் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் பிரச்னைகளுக்கு தீா்வு அளிக்கும் வகையில், இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில், நீரிழிவு, தைராய்டு, ஹாா்மோன் சம நிலையின்மை போன்ற பிரச்னைகளுக்கான சிறப்பு சிகிச்சையும், குழந்தைகள் நலப் பிரிவும், நோயாளிகளுக்கான வாழ்க்கை முறையை மாற்ற ஆலோசனைகளும் வழங்கப்படும் என தெரிவித்தாா்.

இதில், வேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் பொன்னி மணி (எ) சுப்பிரமணியம், செளடாம்பிகா கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் ராமமூா்த்தி, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவா்களிடையே கண்டுபிடிப்பு எனும் படைப்பாற்றலை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலா... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் வி.லதா, செயலாளா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சேந்தமங்கலம், புதன்சந்தைசேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என ந... மேலும் பார்க்க

நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சமூக பங்களிப்பு நிதியை வழங்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகம் வழங்கி உள்... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு கல்லூரி போதை... மேலும் பார்க்க