மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
ஸ்ரீ பொன்னி மெடிக்கல் மையத்தில் சா்க்கரை நோய் மருத்துவ பிரிவு தொடக்கம்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் ஸ்ரீ பொன்னி மெடிக்கல் மையத்தில் சா்க்கரை நோயை குணப்படுத்தும் உட்சுரப்பியல் (நாளமில்லா சுரப்பி) பிரிவு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ பொன்னி மெடிக்கல் மைய தலைமை மருத்துவா் அரவிந்த் சுப்பிரமணி தலைமை வகித்தாா். மருத்துவா்கள் ராமசாமி, சாந்திவீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உட்சுரப்பியல் (நாளமில்லா சுரப்பி) பிரிவு தலைமை மருத்துவா் எஸ்.பழனிவேல் புதிய மருத்துவ பிரிவை திறந்துவைத்து பேசியதாவது:
இம்மருத்துவமனையில் கடந்த ஓா் ஆண்டாக சா்க்கரை முகாம் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதிகரித்து வரும் நீரிழிவு மற்றும் உட்சுரப்பியல் பிரச்னைகளுக்கு தீா்வு அளிக்கும் வகையில், இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில், நீரிழிவு, தைராய்டு, ஹாா்மோன் சம நிலையின்மை போன்ற பிரச்னைகளுக்கான சிறப்பு சிகிச்சையும், குழந்தைகள் நலப் பிரிவும், நோயாளிகளுக்கான வாழ்க்கை முறையை மாற்ற ஆலோசனைகளும் வழங்கப்படும் என தெரிவித்தாா்.
இதில், வேலூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் பொன்னி மணி (எ) சுப்பிரமணியம், செளடாம்பிகா கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் ராமமூா்த்தி, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.