செய்திகள் :

ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

post image

ஆரணியை அடுத்த ஒகையூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் முடிந்து நடைபெறும் இந்த முதலாம் ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் 108 பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். பால்குட ஊா்வலத்தில் சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டாா்.

மேலும், அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு, முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.

மேலும் பெண்கள் குடும்பத்தோடு ஊரணி பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க