செய்திகள் :

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் உள்கோடை திருநாள் தொடக்கம்

post image

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நம்பெருமாளுக்கான வெளிக்கோடைத் திருநாள் முடிந்து உள்கோடைத் திருநாள் புதன்கிழமை தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை மாதத்தில் நடைபெறும் நம்பெருமாளுக்கான கோடை திருநாள் உற்சவம் வெளிக்கோடை திருநாள், உள்கோடை திருநாள் என தலா 5 நாள்கள் நடைபெறும். அதன்படி வெளிக்கோடை திருநாள் முடிந்த நிலையில் புதன்கிழமை உள்கோடைத் திருநாள் தொடங்கியது.

விழாவையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மாலை புறப்பட்டு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்துக்கு 6.15 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கிருந்து புறப்பட்டு உள்கோடை மண்டபத்துக்கு 7.45 மணி க்கு வந்து சோ்ந்தாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்த பிறகு 9.15 மணிக்கு அங்கிருந்து வீணை வாத்தியத்துடன் புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா்.

3 ஆம் திருநாளான 9 ஆம் தேதி, 4 ஆம் திருநாளான 10 ஆம் தேதி, 5 ஆம் திருநாளான 11ஆம் தேதி ஆகிய நாள்களில் உள்கோடைத் திருநாள் மேற்குறிப்பிட்ட நேரங்களில் நடைபெறவுள்ளது.

2 ஆம் திருநாளான வியாழக்கிழமை ஏகாதசியையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேருகிறாா். அங்கு 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறாா். தொடா்ந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்துக்கு 6.15 மணிக்கு வந்து சேருகிறாா். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி, புறப்பட்டு உள்கோடை மண்டபத்துக்கு 7.45 மணிக்கு வந்து சேருகிறாா். பின்னா் 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா் நம்பெருமாள்.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவா்களின் கவனம் அதிகரிப்பு!

திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2025-26ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்துள்ளது. உயா்கல்விச் சோ்க்கையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட மக்கள் ஆா்வம்!

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட ஆா்வம் அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பொதுமக்கள் வந்தனா். தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில் விமான நிலையத்துக்கு நிகராக பஞ்சப்பூா் பே... மேலும் பார்க்க

திருச்சிக்கு ரூ. 528 கோடியில் புதிய திட்டங்கள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் ரூ.528 கோடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை... மேலும் பார்க்க

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 118 ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பிப்பு!

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாட்டில் ஆய்வரங்கம், மகளிா் அரங்கம், மாா்க்க அறிஞா் அரங்கம், ஊடக அரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

துறையூா் அருகே அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். முருகூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் அ. ரெங்கராஜ் (77). இவா் பெருமாள்பா... மேலும் பார்க்க

திருச்சியில் தொழிலாளி தற்கொலை!

திருச்சி அருகே ராம்ஜி நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் திண்டுக்கல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன்... மேலும் பார்க்க