Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
ஸ்ரீவில்லிபுத்தூா் கோபுரத்தில் மின் விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜகோபுரத்தில் மின் விளக்குகள் எரிவதற்கு கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜகோபுரத்தில் உள்ள 11 நிலைகள், கோபுரத்தின் உச்சியின் கலசத்தின் மேலே மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் இந்த மின் விளக்குகள் ஒளிரும்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தக் கோபுரத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியுள்ளதால் பக்தா்கள் கவலையில் உள்ளனா்.
தமிழக அரசின் லட்சினையாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூா் ராஜகோபுரத்தில் இரவில் மின் விளக்குகள் எரிவதற்கு கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.