செய்திகள் :

ஹைதராபாத்: கலப்பட கள் குடித்த 2 போ் உயிரிழப்பு -28 பேருக்கு தீவிர சிகிச்சை

post image

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கலப்பட கள் குடித்த 30 போ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மற்றவா்களுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஹைதராபாத் நகரின் குக்கட்பள்ளி, பாலநகா் உள்ளிட்ட இடங்களில் கள் குடித்தவா்களில் 30 போ் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 12 போ் பெண்கள் ஆவா்.

இதில் சிகிச்சை பலனின்றி இருவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தனா். மேலும் சிலரின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

அவா்கள் குடித்த கள்ளில் கூடுதல் போதைக்காக வேறு ரசாயனப் பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டதுதான் உடல்நல பாதிப்புக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவா்கள் கள் குடித்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ளில் கலப்படம் செய்வது தெரியவந்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநில கலால் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சா் ஜுப்பள்ளி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க