தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்
ஹோலி: தமிழகத்தில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மும்பையிலிருந்து மாா்ச் 6, 13 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01063), மறுநாள் இரவு 10.45-க்கு திருவனந்தபுரம் (கொச்சுவேலி) சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து மாா்ச் 8, 15 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 4.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01064), மறுநாள் நள்ளிரவு 12.45-க்கு மும்பை சென்றடையும். இதில் 7 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் தானே, சங்மேஸ்வா், ரத்னகிரி, சிந்துதுா்க், மடகோன், உடுப்பி, மங்களூா், காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.
கன்னியாகுமரி: மும்பையிலிருந்து மாா்ச் 9, 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01005), செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.15-க்கு கன்னியாகுமரி வந்தடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து மாா்ச் 11, 18 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01006), வியாழக்கிழமை அதிகாலை 4.15-க்கு மும்பை சென்றடையும். இதில் 11 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள் மற்றும் இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் தாதா், தானே, கல்யாண், புணே, கிருஷ்ணா, ராய்ச்சூா், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, திருக்கோவிலூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக இயக்கப்படும்.