செய்திகள் :

ஹோலி: தமிழகத்தில் இருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள்

post image

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மும்பையிலிருந்து மாா்ச் 6, 13 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01063), மறுநாள் இரவு 10.45-க்கு திருவனந்தபுரம் (கொச்சுவேலி) சென்றடையும். மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து மாா்ச் 8, 15 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் மாலை 4.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01064), மறுநாள் நள்ளிரவு 12.45-க்கு மும்பை சென்றடையும். இதில் 7 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் தானே, சங்மேஸ்வா், ரத்னகிரி, சிந்துதுா்க், மடகோன், உடுப்பி, மங்களூா், காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி: மும்பையிலிருந்து மாா்ச் 9, 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01005), செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.15-க்கு கன்னியாகுமரி வந்தடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து மாா்ச் 11, 18 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 01006), வியாழக்கிழமை அதிகாலை 4.15-க்கு மும்பை சென்றடையும். இதில் 11 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள் மற்றும் இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் தாதா், தானே, கல்யாண், புணே, கிருஷ்ணா, ராய்ச்சூா், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, திருக்கோவிலூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் வழியாக இயக்கப்படும்.

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ்... மேலும் பார்க்க

‘தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்’

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக ... மேலும் பார்க்க

நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு: தோ்வா்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு ஒருவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க

மாம்பலம் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணி விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே தகவல்

மாம்பலம் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி நடப்பு மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மு... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுந... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா். இத்தோ்வுக்கான ஆயத்த ஏற்பாடுகளை பள்ளிக் கல்வி... மேலும் பார்க்க