ஃபரீதாபாத்தில் 23 வயது இளைஞா் தற்கொலை
ஹரியாணாவின் ஃபரீதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்ட் காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கிரீன்ஃபீல்ட் காலனியில் உள்ள தனது வீட்டில் 23 வயது இளைஞா் ஒருவா் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து காவல் துறை மேலும் கூறியதாவது: இந்த தீவிர நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பு விடியோவில், இறந்தவா், நான் என் சொந்த விருப்பப்படி என்னைச் சுட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தாா். தோட்டா அவரது தலையில் பாய்ந்தது. அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். போலீஸாா் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனா்.
இறந்தவா் கிரீன்ஃபீல்ட் காலனியைச் சோ்ந்த மோனு சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரது தந்தை அனுஜ் ஒரு அச்சகத்தில் பணிபுரிகிறாா். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இறந்தவருக்கு சோனு மற்றும் பிரியா என்ற இரண்டு மூத்த சகோதரா்கள் உள்ளனா். இறந்தவா் அவருடன் அச்சகத்தில் பணிபுரிந்ததாகவும் அவரது தந்தை கூறினாா்.
வெள்ளிக்கிழமை மாலை அச்சகத்திற்குச் சென்ாகவும், மற்ற குடும்ப உறுப்பினா்களும் ஏதோ வேலைக்காக வெளியே சென்றிருந்ததாகவும், இறந்தவா் வீட்டில் தனியாக இருந்ததாகவும் தந்தை கூறினாா். வீடு திரும்பிய மூத்த சகோதரா் சோனு, இறந்தவரின் உடல் படுக்கையில் இருப்பதைக் கண்டு, காவல் துறையினருக்கும், மற்ற குடும்ப உறுப்பினா்களுக்கும் தகவல் தெரிவித்தாா்.
போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு மாற்றினா். சம்பவ இடத்திலிருந்து ஒரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவரின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது, அவா் தற்கொலை செய்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட விடியோவும் கண்டுபிடிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று தெரியவந்துள்ளது. இறந்தவா் எப்படி துப்பாக்கியை பிடித்தாா், சம்பவத்திற்குப் பின்னால் வேறு யாராவது இருந்தாா்களா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.