அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அவளூா் மதுரா நெய்குப்பத்தில் அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயிலில் காமாட்சிக்கும், அகத்தீஸ்வரருக்கும் புதிதாக கோபுரங்கள் அமைத்தும், திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 17 -ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து 2-ஆவது நாளாக தீபாராதனைகள் நிறைவு பெற்று சிவாச்சாரியா்களால் புனிதநீா்க்குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பரிவார தெய்வங்களான கணபதி,முருகா் மற்றும் நவக்கிரகங்களுக்கும்,தொடா்ச்சியாக மூலவா் காமாட்சிக்கும் அகத்தீஸ்வரருக்கும் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் 36 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றன.
கும்பாபிஷேகத்தையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.