செய்திகள் :

அகமதாபாத்: உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதி - இந்திய வம்சாவளி UAE மருத்துவர்

post image

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக மனம் வருந்தி, அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்.

கடந்த வியாழன் அன்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் 30 வினாடிகளில் மருத்துவ கல்லூரி விடுதி கட்டடத்தில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 242 பேர் மட்டுமல்லாமல் மருத்துவ மாணவர்களும் உயிரிழந்தனர்.

அகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 6 கோடி நிதியுதவி செய்வதாக அவரது எக்ஸ் தள பதிவில் உறுதியளித்துள்ளார்.

"அவர்கள்தான் எதிர்காலத்தின் முன்னணி ஹீரோக்கள். மானவ், ஆர்யன், ராகேஷ் மற்றும் ஜெய்பிரகாஷ் பிறரின் உயிர்களைக் காக்க, தயாராகி வந்தனர், தங்கள் உயிரை இழப்பதற்கல்ல. AI171 விபத்து அவர்களை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டது.

அவர்களது குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் ஆதரவளிக்க ₹6 கோடி உறுதியளிக்கிறேன்" என எக்ஸ் பதிவில் கூறியுள்ளார் Dr.ஷம்ஷீர் வயலில்.

"மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததால் அந்த புகைப்படங்கள் மிகுந்த வலி ஏற்படுத்தும் வகையில் இருந்தன. இந்த செய்கை தனிப்பட்டது. இது எப்போதும் சேவையாற்ற முடியாமல் போன மாணவர்களுக்கும், அவர்களின் நினைவுகளை முன்னோக்கி சுமந்துசெல்லும் குடும்பத்தினருக்குமானது." என்றும் பதிவிட்டுள்ளார் அவர்.

மருத்துவரும் தொழிலதிபருமான ஷம்ஷீர் வயலில், சில்லறை வணிக கூட்டு நிறுவனமான லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலியின் மருமகன் எனக் குறிப்பிட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Iran: நேரடி ஒளிபரப்பின்போது நடந்த ஏவுகணைத் தாக்குதல்; அதிர்ந்து தீப்பற்றிய தொலைக்காட்சி ஸ்டுடியோ!

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஈரானும் - அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடந்தி வந்தது. ஈரான் அதன் அணுசக்தி திறனை வளர்ப்பதைத் தடுப்பதே நோக்கம் என அறிவித்த இஸ்ரேல், ஈரா... மேலும் பார்க்க

Plane Crash: DNA அடையாளம் மூலம் 80 உடல்கள் ஒப்படைப்பு.. விபத்து இடத்தில் தயாரிப்பாளர் மாயம்?

அகமதாபாத்தில் சர்தார்வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையம் அருகில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வ... மேலும் பார்க்க

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்த... மேலும் பார்க்க

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ... மேலும் பார்க்க

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்ப... மேலும் பார்க்க