கடற்கரைக்குச் சென்ற கல்லூரி மாணவியை 10 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை: அனைவரும் ...
அகமதாபாத்: உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 கோடி நிதி - இந்திய வம்சாவளி UAE மருத்துவர்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக மனம் வருந்தி, அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர்.
கடந்த வியாழன் அன்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் 30 வினாடிகளில் மருத்துவ கல்லூரி விடுதி கட்டடத்தில் விழுந்தது. இதில் விமானத்தில் இருந்த 242 பேர் மட்டுமல்லாமல் மருத்துவ மாணவர்களும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 6 கோடி நிதியுதவி செய்வதாக அவரது எக்ஸ் தள பதிவில் உறுதியளித்துள்ளார்.
"அவர்கள்தான் எதிர்காலத்தின் முன்னணி ஹீரோக்கள். மானவ், ஆர்யன், ராகேஷ் மற்றும் ஜெய்பிரகாஷ் பிறரின் உயிர்களைக் காக்க, தயாராகி வந்தனர், தங்கள் உயிரை இழப்பதற்கல்ல. AI171 விபத்து அவர்களை நம்மிடம் இருந்து எடுத்துக்கொண்டது.
அவர்களது குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் ஆதரவளிக்க ₹6 கோடி உறுதியளிக்கிறேன்" என எக்ஸ் பதிவில் கூறியுள்ளார் Dr.ஷம்ஷீர் வயலில்.
"மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததால் அந்த புகைப்படங்கள் மிகுந்த வலி ஏற்படுத்தும் வகையில் இருந்தன. இந்த செய்கை தனிப்பட்டது. இது எப்போதும் சேவையாற்ற முடியாமல் போன மாணவர்களுக்கும், அவர்களின் நினைவுகளை முன்னோக்கி சுமந்துசெல்லும் குடும்பத்தினருக்குமானது." என்றும் பதிவிட்டுள்ளார் அவர்.
They were future frontline heroes.
— Dr. Shamsheer Vayalil (@drshamsheervp) June 16, 2025
Manav, Aaryan, Rakesh, and Jaiprakash were preparing to save lives, not lose their own. The AI171 crash took them from us. Pledging ₹6 crore to support their families and others affected.#AirIndia171#AI171#BJMedicalCollegepic.twitter.com/Jh0vivpstJ
மருத்துவரும் தொழிலதிபருமான ஷம்ஷீர் வயலில், சில்லறை வணிக கூட்டு நிறுவனமான லுலு குரூப் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலியின் மருமகன் எனக் குறிப்பிட்டுள்ளது.