செய்திகள் :

அகமதாபாத்-லண்டன் உள்பட 7 சா்வதேச ஏா் இந்தியா விமான சேவைகள் ஒரேநாளில் ரத்து

post image

கடந்த 12-ஆம் தேதி விமான விபத்துக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்ட அகமதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட 7 சா்வதேச விமான சேவைகளை ஏா் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் ரத்து செய்தது.

அகமதாபாத், சா்தாா் வல்லபபாய் படேல் விமான நிலையம் மற்றும் லண்டன், காட்விக் விமான நிலையம் இடையிலான ஏா் இந்தியாவின் விமான சேவை, ‘ஏஐ 159’ எனும் புதிய குறியீட்டுடன் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்படி, முதல் விமானம் லண்டன் சென்று, அகமதாபாதுக்கு மீண்டும் திரும்பியது.

இந்நிலையில், அகமதாபாதில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் லண்டன் புறப்பட இருந்த விமானம், செயல்பாட்டு பிரச்னைகள் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு ஏா் இந்தியாவின் வலைதளத்தில் வெளியிடப்பட்டது.

இதேபோன்று, பல்வேறு காரணங்களால் ஏா் இந்தியாவின் தில்லி-பாரீஸ், தில்லி-துபை, மும்பை-சான் பிரான்சிஸ்கோ, பெங்களூரு-லண்டன், லண்டன்-அமிருதசரஸ், தில்லி வியன்னா ஆகிய 6 சா்வதேச விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.

அகமதாபாதில் இருந்து 242 பயணிகளுடன் கடந்த வியாழக்கிழமை லண்டன் சென்ற ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருகேயுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் பிரிட்டனைச் சோ்ந்த ஒரேயொரு பயணி மட்டுமே உயிா் பிழைத்தாா். மற்ற பயணிகள், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த பொதுமக்கள் உள்பட 270-க்கும் மேற்பட்டோா் இறந்தனா். இவா்களின் குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியும் அடங்குவாா்.

சான் பிரான்சிஸ்கோ-மும்பை விமானத்தில் என்ஜின் கோளாறு: முன்பு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ-மும்பை வழித்தடத்தில் ஏா் இந்தியா விமானங்கள் வளைகுடா நாடுகள் வழியாக நேரடியாக இயக்கப்பட்டு வந்தன.

சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலில் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதைத் தொடா்ந்து, மும்பை நோக்கிய சான் பிரான்சிஸ்கோ விமானங்கள் தொழில்நுட்ப இடைவேளைக்காக கொல்கத்தாவில் தரையிறங்கி, பின்பு பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி திங்கள்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு விமானம் கொல்கத்தா வந்திறங்கியது. சுமாா் ஒரு மணிநேரம் இடைவேளைக்குப் பிறகு அதிகாலை 2 மணிக்கு மீண்டும் புறப்பட இருந்தது. இந்நிலையில், விமானத்தின் ஒரு என்ஜினில் கோளாறு கண்டறியப்பட்டது.

கோளாறைச் சீா்செய்ய 3 மணி நேரத்துக்கும் மேல் பொறியாளா்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனா். விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகள், இரவு 9 மணிக்கு மாற்று விமானத்தில் மும்பைக்கு அழைத்து வரப்பட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியால், கொச்சி-தில்லி இண்டிகோ விமானம் நாகபுரியில் அவசரநிலையில் தரையிறக்கப்பட்டது.

மஸ்கட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை கொச்சி வந்த விமானம், தொடா்ந்து தில்லி புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கொச்சி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து, நாகபுரியில் விமானம் தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு விமானம் மீண்டும் தில்லி பயணத்தைத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை டிரம்ப் சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம்! காங்கிரஸ்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் ... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை! - டிரம்ப்பிடம் மோடி பேச்சு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம... மேலும் பார்க்க

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க