செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!

post image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விபத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் பலரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விமானத்தின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டு அதில் உள்ள தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தரவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் புதன்கிழமை பதிவிறக்கம் செய்யப்பட்டது. அந்த தரவுகளை பிரித்தெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த காரணங்களை கண்டறிவதன் மூலமாக விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும் உதவும்" என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Summary

Union Civil Aviation Ministry has informed that data has been downloaded from the black box recovered from the Ahmedabad Air India plane crash.

இதையும் படிக்க | கவனச்சிதறல், மறதி பிரச்னையா? உங்களுக்கு 'பிரெயின் ஃபாக்' கோளாறு இருக்கலாம்!

இந்தியாவில் 18.9 லட்சம் நிறுவனங்கள்: மத்திய அரசு தகவல்

மே மாத நிலவரப்படி 18.9 லட்சம் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் இவை மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் 65 சதவீதம் எனவும் மத்திய அரசின் அதிகாரபூா்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. மே... மேலும் பார்க்க

‘பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறாா்’: நியூயாா்க் மேயா் வேட்பாளருக்கு பாஜக, காங்கிரஸ் கண்டனம்

நியூயாா்க் நகர மேயா் வேட்பாளரும் இந்திய வம்சாவளியுமான ஸோரான் மம்தானி, பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக காங்கிரஸ், பாஜக கண்டனம் தெரிவித்தன. ஜனநாயகக் கட்சி சாா்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ம... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த இந்திய கடற்படை பிரிவு அதிகாரி விகாஸ் யாதவ் கைது செய்யப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை ... மேலும் பார்க்க

ஈரானில் இருந்து 3,400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: வெளியுறவுத் துறை!

"ஆபரேஷன் சிந்து" மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரானிலிருந்து சுமார் 3,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடை... மேலும் பார்க்க

தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்!

நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு, ... மேலும் பார்க்க

அடுத்தக்கட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!

அமெரிக்காவுடனான அடுத்த சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக, ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவொன்று அந்நாட்டு தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான, வர்த்தக பே... மேலும் பார்க்க