செய்திகள் :

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

post image

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பலி குறித்து தினேஷ் கார்த்திக் விடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

ஜுன் 4-இல் நடந்த சோகம்...

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக கடந்த 2025 சீசனில் கோப்பையை வென்றது. அதன் வெற்றிக் கொண்டாட்டத்தில் சின்னசாமி திடலுக்கு அருகில் 11 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

சமீபத்தில் ஆர்சிபி அணி ஆர்சிபி கேர்ஸ் என்ற அமைப்பினை உருவாக்கி அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் தினேஷ் கார்த்திக் இருக்கிறார். அவர் பேசிய விடியோவை ஆர்சிபி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்

அதில் அவர் பேசியிருப்பதாவது:

கடந்த ஜூன் 4-இல் உயிரிழந்த குடும்பத்திற்கு எனது மனப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் என்னவெல்லாம் கடந்து வந்திருப்பீர்கள் என்பதை என்னால் யோசிக்கக் கூட முடியவில்லை. இதிலிருந்து வெளிவர கடவுள் உங்களுக்கு பலத்தைத் தர வேண்டிக்கொள்கிறேன்.

இந்தக் கடினமான நேரத்தில், நமது ஆர்சிபி ரசிகர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து, அவர்களுக்குத் துணையாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Royal Challengers Bengaluru (RCB) mentor and batting coach Dinesh Karthik on Thursday expressed his condolences and support for the victims who tragically lost their lives in the stampede outside the M Chinnaswamy Stadium during the team's victory celebrations on June 4.

2-ஆவது டி20: ஜிம்பாப்வேயிடம் இலங்கை மோசமான தோல்வி!

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17.4 ஓவர்களில் அனைத்து... மேலும் பார்க்க

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

ஆசிய கோப்பைக்கான ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட... மேலும் பார்க்க