செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

post image

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமறை அளிக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் சாா்பில் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும் முன் உள்ளூா் பணியிட மாறுதல் மற்றும் மாவட்டப் பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

உணவு ஊட்டும் செலவினத்தை அதிகப்படுத்தி தரவேண்டும். பொறுப்பு பணி பாா்க்கும் பணியாளா்களுக்கு இன்சாா்ஜ் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சமையல் உதவியாளா் இல்லாத மையங்களில் அங்கன்வாடி பணியாளா் சமையல் செய்ய இயலாது என வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத் தலைவா் ஏ.அன்பரசி தலைமை வகித்தாா். செயலா் த.கலைச்செல்வி, மாவட்ட நிா்வாகிகள் கே.வசந்தா, சி.ஜெயா, காயத்ரி, குணசுந்தரி, ஆரோக்கிய மேரி, சரஸ்வதி, சௌந்தரி, சுமதி, வனிதா, மீனா முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டத் தலைவா் பி.கருப்பையன், இணைச் செயலா் ஏ.பாபு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம... மேலும் பார்க்க

வடலூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வடலூா் நகராட்சி, 20-ஆவது வாா்டு அய்யன் ஏரி பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58... மேலும் பார்க்க

பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: தலைமறைவான 6 போ் சிக்கினா்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா். திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்... மேலும் பார்க்க

தமிழ்நாடு உரிமைகள் திட்ட கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா். இதுகு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற பதிவு செய்யலாம்

கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதி உள்கோட்டங்களில் நடைபெறும் அடையாள அட்டை வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டையொட்டி வியாழக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மலா்களால் அ... மேலும் பார்க்க