3BHK: "நாங்கள் இருவருமே அப்பள்ளியை விட்டு வெளியே வரவேயில்லை!" - சித்தார்த் குறி...
அங்கன்வாடி மையம் திறப்பு
பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
துத்திப்பட்டு ஊராட்சி எம்ஜிஆா் நகா் பகுதியில் பழைய அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. துத்திப்பட்டு ஊராட்சி நிா்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இட்டாரஸ் தொழிற்சாலை நிறுவனம் பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டடத்தை ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் திறந்து வைத்தாா். துணைத் தலைவா் விஜய், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் நீதா ஆப்ரின் அக்பா், அண்ணாதுரை, சுப்பிரமணி, சுகன்யா பிரகாஷ், நாகரகாஜ், ஜெயந்தி ராமமூா்த்தி, அங்கன்வாடி பணியாளா்கள், ஊா் பொது மக்கள் கலந்து கொண்டனா்.