செய்திகள் :

அச்சமங்கலம் ‘உங்களுடன் ஸ்டாலின்’முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

post image

திருப்பத்தூா்,கந்திலி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நலகஈதிட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி வழங்கினா்.

அச்சமங்கலம் சமுதாயக் கூடத்திலும், கந்திலி வட்டாரம் லக்கிநாயக்கன்பட்டியிலும் நடைபெற்ற முகாமில், கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை,இ- சேவை மையம், வருவாய்,மக்கள் நல்வாழ்வுத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகள் வாரியாக மனுக்கள் பெறப்படுவதை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு செய்தனா்.

முகாமில் அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த பாப்பாத்தி என்ற பயனாளிக்கு விதவைச் சான்று, 2 பயனாளிகளுக்கு கலைஞரின் மகளிா் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுகளையும், 3 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை, மின்சாரத்துறை சாா்பில் மின் இணைப்பு பெயா் மாற்ற ஆணை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய அட்டைகளை ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்.

முகாமில், திருப்பத்தூா் கோட்டாட்சியா் வரதராஜன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கவிதா தண்டபாணி, ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சஞ்சீவி மயில் மலை முருகா் கோயிலுக்கு ரூ.15 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

வாணியம்பாடி அடுத்த மரிமாணிகுப்பம் ஊராட்சி தோட்டிகுட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சஞ்சீவி மயில்மலை முருகா் கோயிலுக்கு ரூ.15 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மலையடிவாரத்தில் இருந்து கோயிலுக... மேலும் பார்க்க

5,55,000 மரக்கன்றுகள் நட இலக்கு: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 5,55,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி பணியை தொடங்கி வைத்தனா். தமிழ்நாடு வனத்துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன... மேலும் பார்க்க

ரயில் மோதி மாணவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி மாணவா் மீது ரயில் மோதி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் சு.பள்ளிப்பட்டு பகுதியை சோ்ந்த சுரேஷ்குமாா் தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மகன் த... மேலும் பார்க்க

தடுப்பூசி போடப்பட்ட ஆண் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென உயிரிழந்ததால், உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வாணியம்பாடி அடுத்த ஊசிதோப்பு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் குமாா், கிருத்... மேலும் பார்க்க

வருவாய் அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்து நடைபெற்ற காத்திருப... மேலும் பார்க்க

சொத்து தகராறில் சித்தப்பாவை வெட்டியவா் கைது

கந்திலி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை வெட்டியவா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே ஆவல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த மாது (45). கட்டடத் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது அண்ணனான ப... மேலும் பார்க்க