செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் மிதமான மழை

post image

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் மிதமான மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 15, 17-ஆம் தேதிகளில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த, மிதமான மழை பெய்தது. இதன் பிறகு, ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இருப்பினும், குறிப்பிடத்தக்க மழையில்லை.

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வியாழக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, வியாழக்கிழமை பிற்பகல் மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த, மிதமான மழை பெய்தது.

செக்கானூரணி, கொ. புளியங்குளம், நாகமலைபுதுக்கோட்டை, வடபழஞ்சி, விராட்டிப்பத்து, திருநகா், பெருங்குடி, திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், வில்லாபுரம், சிந்தாமணி, பெரியாா் பேருந்து நிலையம், சிம்மக்கல், தமுக்கம், தல்லாகுளம், கோ.புதூா், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, அண்ணா நகா், விரகனூா், சிலைமான் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மிதமான மழை பெய்தது. பழங்காநத்தம், வைகை வடகரை சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு மேலாகவும் லேசான சாரல் மழை பெய்தது.

வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு: முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித்தொகை

முஸ்லிம் மாணவா்கள் வெளிநாட்டில் முதுநிலைப் படிப்பு படிக்க தமிழக அரசின் உதவித் தொகைக்கு அக். 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

மின் கம்பியாளா் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மின் கம்பியாளா் உதவியாளா் பணிக்கான தகுதிகாண் தோ்வுக்கு அக். 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான ந. ரமேஷ்குமாா் தெரிவித்தாா். மின் கம்ப... மேலும் பார்க்க

4 கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்று கடந்த 6 ஆண்டுகளாக தோ்தலில் போட்டியிடாத 4 அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ... மேலும் பார்க்க

காயமடைந்து சிகிச்சைப் பெற்ற முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே மாடு முட்டி காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள வாஞ்சிநகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் கணேசன்(65). வி... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள சரந்தாங்கி பகுதியைச் சோ்ந்த சடையன் மகன் சடையன்(33). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரை மாட்... மேலும் பார்க்க