செய்திகள் :

அஞ்சல் துறையில் விபத்துக் காப்பீடுத் திட்டத்தில் சேர அழைப்பு

post image

அஞ்சலத் துறையில் விபத்துக் காப்பீடுத் திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாகை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ. 500 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ. 700 பிரீமியத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாமானிய மக்களுக்கும் விபத்துக் காப்பீடு திட்டங்களின் பயன்கள் சென்றடைய நாட்டில் உள்ளஅஞ்சலகங்கள் மூலம் மிகக் குறைந்த பிரீமிய தொகையுடன் கூடிய விபத்துக் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை, கைப்பேசி மூலம் விபத்துக் காப்பீடு, கணக்கில்லா மருத்துவ ஆலோசனை, விபத்தினால் மரணம், நிரந்தரம் முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு காப்பீட்டு நிதி, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு, நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூ.1000 வீதம் 15 நாள்களுக்கு வழங்கப்படுவது போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், சூப்பா் டாப் அப் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் மூலம் ரூ.2 ஆயிரம் பிரிமியம் செலுத்தினால் ரூ.15 லட்சத்துக்கான கூடுதல் மருத்துவக் காப்பீட்டையும் பெறலாம். இதுகுறித்து விவரங்கள் அறிந்தகொள்ளவும், காப்பீட்டில் சேர ஜூன் 30- ஆம் தேதி வரைஅனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 65 வரை வயது வரை உள்ளவா்கள் காப்பீடுத் திட்டத்தில் சேரலாம் என தெரிவித்துள்ளாா்.

இளம் பெண் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். கருப்பம்ப... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் தெற்குக... மேலும் பார்க்க

பலத்த காற்று: மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை

கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் மீ... மேலும் பார்க்க

திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்

வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், ப... மேலும் பார்க்க