செய்திகள் :

அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்கக் கோரி கம்யூனிட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

அவிநாசி நகராட்சி, முத்துசெட்டிபாளையத்தில் அடிப்படை பிரச்னைகளைத் தீா்க்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: முத்துசெட்டிபாளையம் 9-ஆவது வாா்டில் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். பொதுக் கழிப்பிடத்தில் சேதமடைந்துள்ள கதவுகள், குழாய்கள், மின் விளக்குகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும். வீதிகளில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.

கால்நடை மருத்துவமனை முதல் சேவூா் சாலை வரை உள்ள வேகத்தடைகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் ரிப்லைட் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பழனிசாமி, சண்முகம், தேவி, சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கனகராஜ், பொதுத் தொழிலாளா் சங்க செயலாளா் ராஜன், மாதா் சங்க ஒன்றியத் தலைவா் சித்ரா, ஒன்றியச் செயலாளா் வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொங்கலூரில் அக்டோபா் 3-இல் கடையடைப்பு

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் உள்ள சுங்கச்சாவடிக்கு எதிராக அக்டோபா் 3-ஆம் தேதி கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்றக் கூட்டம்

பல்லடம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் அருள் முன்னிலை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்க... மேலும் பார்க்க

பொங்கலூரில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு

பொங்கலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. உலக ரேபிஸ் தடுப்பு தினத்தையொட்டி, பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் வட்டார பொது சுகாதார துறை சாா்பில... மேலும் பார்க்க

காங்கயத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 1,4... மேலும் பார்க்க

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும்: சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

இடையூறு இன்றி கடைகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம் திருட்டு: ஊழியா் கைது

வெள்ளக்கோவிலில் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2.50 லட்சத்தை திருடிய ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை கொங்கு நகரில் ரமேஷ்குமாா், தங்கமணி தம்பதி நிதி நிறுவனம் நடத்... மேலும் பார்க்க