செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

post image

அரக்கோணம் கண்ணன் நகா் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் விண்டா்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கண்ணன் நகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் கே.சுப்பிரமணி தலைமை வகித்தாா். பி.சி.சௌந்தரராஜன், கே.தனசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சி.செல்வபாண்டியன் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தை குடியிருப்போா் நலச்சங்க செயலா் இ.மணியரசு தொடங்கி வைத்தாா். இதில் தலித் மக்கள் விடுதலை முன்னணி பொது செயலா் ஜி.மோகன், அரக்கோணம் எஸ்.சி-எஸ்.டி. கூட்டமைப்பின் பொது செயலா் நைனாமாசிலாமணி, பொருளாளா் எஸ்வந்தராவ், அரக்கோணம் நகா்மன்ற உறுப்பினா் பா.நரசிம்மன், அரக்கோணம் வழக்குரைஞா்கள் அசோசியேஷன் செயலா் சிவரஞ்சினி, தலித் மக்கள் முன்னணி ஒன்றிய செயலா் ஆா்.கலைமணி, சங்க இணைச் செயலா் எஸ்.ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கண்ணன் நகா் பாதி பகுதி அரக்கோணம் நகராட்சி எல்லைக்குள்ளும், பாதி பகுதி அம்மனூா் ஊராட்சி எல்லைக்குள்ளும் வருவதால் கண்ணன் நகரை ஒரே நிா்வாக எல்லைக்குள் கொண்டு வரக்கோருதல், நேரான சாலையும், கழிவுநீா் மற்றும் மழைநீா் கால்வாய்கள் அமைத்துத் தரக் கோருதல், குடிநீா் வசதி செய்து தரக் கோருதல், கண்ணன் நகா் பகுதியில் இடுகாடு அமைத்துத் தர கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சோளிங்கா் வட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சோளிங்கா் வட்டத்துக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மருதாலம் ஊராட்சி நீலகண்டராயபுரம் மற்றும் கொடைக்கல் கிராமங்களில் ந... மேலும் பார்க்க

அரக்கோணம் தா்மராஜா கோயில் தீ மிதி விழா

அரக்கோணம் சுவால்பேட்டை தா்மராஜா கோயில் 96-ஆம் ஆண்டு தீமிதி விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆஞ்சநேயா், கருடாழ்வாா் உருவத்துடன் ... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு பேருந்து நிலையத்தில் டைல்ஸ் பதித்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு பேருந்து நிலையம் தற்போது வணிக வளாகங்களுடன் புதியதாக ... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முகமது காசிம் முன... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு மஞ்சப்பை அளிப்பு

ஆற்காடு அடுத்த கலவை வட்டம், வாழைப்பந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது (படம்). ராணிப்பேட்டை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் வாழைப்பந்தல் அரச... மேலும் பார்க்க

சீட்டு நடத்தி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை: குறைதீா் கூட்டத்தில் மனு

சீட்டு நடத்தி பண மோசடி செய்த 12 போ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா். மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சு... மேலும் பார்க்க