செய்திகள் :

அடிமைக் கட்சியல்ல திமுக; யாருக்கும் அடிபணிய மாட்டோம்! - உதயநிதி ஸ்டாலின்

post image

ஈ.டி.(அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்படமாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை, டாஸ்மாக் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, டாஸ்மாக் புகாரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்துதான் முதல்வர் தில்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பேசிய உதயநிதி,

"முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதி உரிமையைக் கேட்பதற்காக தில்லிக்கு சென்றுள்ளார். ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன். ED (அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்பட மாட்டோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம். மிரட்ட முயற்சித்தார்கள். மிரட்டி அடிபணிய வைப்பதற்கு அடிமை கட்சியல்ல திமுக. முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியார் கொள்கைகள் கொண்ட கட்சி. தப்பு செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. யாருக்கும் அடிபணியத் தேவையில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | கோட்டா மாணவர்கள் தற்கொலை விவகாரம்: ராஜஸ்தான் துணை முதல்வர் என்ன சொல்கிறார்?

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் (84) காலமானார்.இவர் அரபு மொழி மற்றும் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளார். மேலும், எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர்... மேலும் பார்க்க

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் பரிசீலிப்பார்: முதல்வர் நம்பிக்கை

தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி பரிசீலிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் தில்லி பாரத் மண்டபத்தில் இன்று(மே 24) நடைபெற்றத... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் லாக்-அப் மரணங்கள்! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் காவல்துறை அத்துமீறி செயல்படுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் சமீபகாலமாக லாக்-அப் மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக... மேலும் பார்க்க