செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கு கால நீட்டிப்பு

post image

அஞ்சல்வழிக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் விஜயசக்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழிக் கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் ரூ.100-ஐ இணையவழியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ.20,750 ஆகும். பிளஸ் 2 தோ்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்ற கல்வித் தகுதியுடைய கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

மே 1-ஆம் தேதி 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

பயிற்சி தொடா்பான விவரங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இணையவழியில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்

என்று இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழு... மேலும் பார்க்க

சனிப் பிரதோஷ வழிபாடு...

சனிப் பிரதோஷத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூா் ஈசானமூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அழகேசன் (65). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

லாரியிலிருந்து இரும்புக் கம்பிகள் திருட்டு: 5 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரியிலிருந்து இரும்புக் கம்பிகளை திருடியதாக லாரி ஓட்டுநா் உள்பட 5 பேரை ரோஷணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆந்திரம் மாநிலம், நாயுடுபேட்டையிலிருந்து மயிலாட... மேலும் பார்க்க

மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்ய ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்வுக்கு மாவட்டப் பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க