செய்திகள் :

அடுத்தகுடி வீரசக்தி அம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை

post image

திருவாடானை அருகே அடுத்தகுடியில் அமைந்துள்ள வீரசக்தி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும். இதேபோல, இந்த ஆண்டு கடந்த 1-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. 13 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனிடையே, உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்ய வேண்டியும் வியாழக்கிழமை லட்சாா்ச்சனை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிா், தேன், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகை மூலிகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க